அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கறிற்றாஸ் வாழ்வுதய ஒளிவிழா நிகழ்வும் சர்வமத கண்காட்சியும்-படங்கள்



மன்னாரில் கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகள் தொடர்பான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக சர்வமத ஒளிவிழா(கிறிஸ்த்துபிறப்பான)நிகழ்வும் அத்துடன் சர்வ மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி நிகழ்வு ஒன்றும் 11-12-2018 செவ்வாய்க்கிழமை இன்று இடம் பெற்றது

மன்னார் வாழ்வுதய பணிப்பாளர் அருட்தந்தை  S.அன்ரன் அடிகளார் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மன்னார் வாழ்வுதய நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பேற்ற குறித்த நிகழ்வில்

சர்வமததலைவர்கள் அருட்தந்தையர்கள் அரச ஊழியர்கள், மற்றும்  சமய பிரதி நிதிகள் உட்பட.   வாழ்வுதய சர்வமத செயற்பாடுகளின் இலக்குக் கிராமங்களான அளவக்கை, செம்மண்தீவு,வட்டக்கண்டல்,ஆண்டாங்குளம், அடம்பன் ஆகிய கிராமங்களில் இருந்து கிராம அலுவலர்கள்,சமயத் தலைவர்கள், கலாச்சார உத்தியோகஸ்தர்கள் இவ்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் பல் மதங்களை சேர்ந்த அங்கத்தவர்களால் கலைநிகழ்வுகள் இடம் பெற்றதுடன் சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் தொடர்பான சிறப்புகருத்துரைகளும் இடம் பெற்றதுடன்
மத நல்லிணக்கத்தை எடுத்து காட்டும் வகையில் இளையோர் யுவதிகளால் உருவாக்கப்பட்ட வரையப்பட்ட சித்திரங்கள் ஆக்கங்கள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

  குறித்த நிகழ்வின் மூலம் சர்வமதச் செயற்பாடுகள் கிராம மட்டத்தில் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த ஏதுவாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 சமயங்களுக்கிடையிலான  நல்லிணக்கம் என்பது இவ்வாறான சமய நிகழ்வுகளின் மூலமும் அதே நேரம் ஒவ்வொரு மனித உள்ளங்களில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.
















































மன்னாரில் கறிற்றாஸ் வாழ்வுதய ஒளிவிழா நிகழ்வும் சர்வமத கண்காட்சியும்-படங்கள் Reviewed by Author on December 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.