மன்னாரில் 'சாயிட் சிட்டி' கிராமத்தில் 120 வீடுகள் அமைக்கப்பட்டு அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் திறந்து வைப்பு-(படம்)
மன்னார் -தலை மன்னார் பிரதான வீதி இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகள் இன்று வெள்ளிக்கிழமை11-01-2019 மதியம் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்கிளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி இரண்டாம் கட்டை பகுதியில் 'சாயிட் சிட்டி' எனும் கிராமம் அமைக்கப்பட்டு அங்கு பள்ளிவாசல், 120 வீடுகள் மற்றும் பொது மண்டபம் என்பன அமைக்கப்பட்ட நிலையில், பள்ளிவாசல் மற்றும் பொது மண்டபம் என்பன திறந்து வைக்கப்பட்டதோடு, 120 வீடுகளும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் டுபாய் நாட்டின் தனவந்தர் 'அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜா' மற்றும் அவருடைய குழுவினருடன் இணைந்து திறந்து வைத்ததோடு, தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு குறித்த வீடுகள் கையளிக்கப்பட்டது.
நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் மீள் குடியேறாத நிலையில் காணப்பட்ட சுமார் 120 முஸ்ஸிம் குடும்பங்களுக்கு டுபாய் நாட்டின் தனவந்தர் 'அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜா' அவர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் டுபாய் நாட்டின் தனவந்தர் தலைமையிலான குழுவினர்,அமைச்சரின் பிரத்தியே செயலாளர் றிப்கான் பதியுதீன்,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி இரண்டாம் கட்டை பகுதியில் 'சாயிட் சிட்டி' எனும் கிராமம் அமைக்கப்பட்டு அங்கு பள்ளிவாசல், 120 வீடுகள் மற்றும் பொது மண்டபம் என்பன அமைக்கப்பட்ட நிலையில், பள்ளிவாசல் மற்றும் பொது மண்டபம் என்பன திறந்து வைக்கப்பட்டதோடு, 120 வீடுகளும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் டுபாய் நாட்டின் தனவந்தர் 'அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜா' மற்றும் அவருடைய குழுவினருடன் இணைந்து திறந்து வைத்ததோடு, தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு குறித்த வீடுகள் கையளிக்கப்பட்டது.
நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் மீள் குடியேறாத நிலையில் காணப்பட்ட சுமார் 120 முஸ்ஸிம் குடும்பங்களுக்கு டுபாய் நாட்டின் தனவந்தர் 'அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜா' அவர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் டுபாய் நாட்டின் தனவந்தர் தலைமையிலான குழுவினர்,அமைச்சரின் பிரத்தியே செயலாளர் றிப்கான் பதியுதீன்,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் 'சாயிட் சிட்டி' கிராமத்தில் 120 வீடுகள் அமைக்கப்பட்டு அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் திறந்து வைப்பு-(படம்)
Reviewed by Author
on
January 11, 2019
Rating:
No comments:
Post a Comment