அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரிப்பு-மக்கள் அசௌகரியம்-படம்

மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் வாகனங்களில் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிய வருகின்றது.

மன்னார் பிரதான பாலத்தில் இரவு,பகல் பாராது கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.தனியாக அல்லது கூட்டமாக கழுதைகள் நடமாடித்திரிகின்றது.

இதனால் மோட்டார் சைக்கில் மற்றும் ஏனைய வாகனங்களில் மன்னாரக்கு வருபவர்களும், மன்னாரில் இருந்து பிரதான பாலத்தினூடாக வேறு இடங்களுக்கு செல்பவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதோடு, விபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பிரதான பாலத்தை சுற்றித்திரிகின்ற கழுதைகளை பிடித்து வேறு இடங்களில் விட உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வேளை மன்னார் நகர் பகுதியில் மக்களுக்கு இடையூராக,விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 70 இற்கும் மேற்பட்ட கழுதைகளை மன்னார் நகர சபையினால் பிடிக்கப்பட்டு மாற்று இடம் ஒன்றிற்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் பிரச்சினைகள் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரிப்பு-மக்கள் அசௌகரியம்-படம் Reviewed by Author on January 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.