அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்-உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் -படங்கள்


உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு மன்னார் முருங்கன் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக் கிழமை (25.01.2019) மாலை 4.30 மணியளவில் நறுவலிக்குளம் மாதிரிக் கிராமத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து பின் அப் பகுதியிலுள்ள மெதடிஸ்த ஆலயத்துக்கு இரு திரு அவைகளிலுள்ள இறை மக்களும் அருட்பணியாளர் துறவறச் சபையினரும் பவனியாகச் சென்றனர்.
மெதடிஸ்த ஆலயத்தில் இறை வழிபாடுகளும் மறையுரை மற்றும்
முக்கியஸ்தர்களின் உரைகளும் நடைபெற்றன.

இவ் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார், மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு குரு முதல்வர்
எஸ்.எஸ்.ரென்ஸ் அடிகளார், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர்
அருட்பணி.எல்.சுரேஸ் றெவல் அடிகளார், அருட்பணி.திருமறை தாசன், மன்னார் சிறுகுருட இயக்குனர் அருட்பணி நேசன் அடிகளார், மன்னார் மெதடிஸ் அலய சேகர அருட்பணி.கே.ஜெகதாஸ் அடிகளார், மெதடிஸ்த அருட்சகோதரி நித்தியகலா, அருட்பணி நேறு அடிகளார் என பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வில் கடவுளின் பிள்ளைகளாகிய ஒவ்வொருவரும் குறுகிய சிந்தனைகளை களைந்து பிரிவினை என்கிற சுவர்களைத் தகர்த்து கிறிஸ்தவ ஒன்றினைப்பு எனும் இறை சமூகத்தில் இணைந்து இறை ஒன்றிப்பின் புதிய வாழ்வில் கலாச்சாராத்தை உருவாக்குவோம்  என்னும் தொனிப்பொருளில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.










மன்னாரில்-உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் -படங்கள் Reviewed by Author on January 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.