அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விழிர்ப்புணர்வு கருத்தமர்வு-(படம்)

வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில்,பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டம் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விழிர்ப்புணர்வு கருத்தமர்வு இன்று  வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த விழிர்ப்புணர்வு கருத்தமர்வில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் நகர சபை மற்றும் பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு,உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விழிர்ப்புணர்வு கருத்தமர்வு-(படம்) Reviewed by Author on February 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.