அண்மைய செய்திகள்

recent
-

குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டுமா ?


நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு தான் குடல்.
இது நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளை சரியான முறையில் செரிமானம் செய்து இதிலுள்ள சத்துக்களை எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து கொடுக்கும் தன்மை இதற்குண்டு.

இத்தகைய தன்மை கொண்ட குடல் பகுதியே பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றனாக பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும்.
குடல் பகுதி பாதிக்கப்படுவதற்கு சில உணவுகள் தான் முக்கிய காரணியாக இருக்கிறது.
குறிப்பாக இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவை தான் குடல் பகுதியை பெரிய அளவில் பாதிக்க செய்கின்றன.
இந்த பிரச்சினையிலிருந்து விடுபட குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • தினமும் சீரகத்தை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பகுதியில் எந்தவித நோய் தாக்குதல்களும் ஏற்படாது. அத்துடன் வயிற்றில் ஏற்பட கூடிய பிரச்சினைகளையும் இது தடுத்து விடும் தன்மை கொண்டது. மேலும் வயிற்று புண் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
  • தினமும் மோர் குடித்து வந்தால் நீர்சத்து அதிகரிப்பதோடு குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்கும்.
  • அல்லிசின் என்கிற மூல பொருள் பூண்டில் உள்ளதால் குடல் பகுதியை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும் இது பயன்படுகிறது. மேலும், செரிமானம் விரைவாக நடைபெற பூண்டு தான் சிறந்த உணவு.
  • பப்பாளியில் உள்ள பாப்பைன் என்கிற மூல பொருள் செரிமானத்தை தூண்டும் நொதியை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் ஜீரண கோளாறு இல்லாமல் உணவு விரைவிலே செரிமானம் அடையும்.
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வருவதன் மூலமாக குடல் பகுதியில் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும். அத்துடன் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளும். இந்த சாற்றை வாரத்திற்கு 3 முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது.
  • இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக வயிற்றில் உண்டாக கூடிய புண்களை தடுக்க முடியும். அத்துடன் பசியை தூண்டிய குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். பெருங்குடல் புற்றுநோய், குடல் வாழ்வு புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து நம்மை காக்கும் தன்மை இதற்குண்டு.
  • புதினாவின் மென்தால் என்கிற மூலப்பொருள் தான் புதினாவின் முழு ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணம். வயிற்று உப்பசம், குடல் புண், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு இது சிறந்த மருந்தாக அமையும். குடல் வழியை சுத்தம் செய்யவும் இந்த உணவு பொருள் உதவும்.
  • சியா விதைகளுக்குகுடல் பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை இதற்கு உண்டு. மேலும், காலையில் ஏற்பட கூடிய மலச்சிக்கல் பிரச்சினைக்கும் இந்த விதைகள் சிறந்த தீர்வாக இருக்கும். நார்ச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் மிக சுலபமாக செரிமானத்தை ஊக்குவிக்கும்.
குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டுமா ? Reviewed by Author on March 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.