அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராவணா செயற்கைகோள் -


இலங்கையின் இளம் பொறியாளர்கள் இருவரினால் நிர்மாணிக்கப்பட்ட ராவணா-1 என்ற முதலாவது செயற்கைகோள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நாசா விண்வெளி நிலையத்தினால் இந்த செயற்கைகோள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1.1 கிலோகிராம் நிறையுடைய இந்த செயற்கைகேள் ஜப்பான் க்யூஷு இன்ஸ்டீடியுட் என்ற நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த தரிந்து தயாரத்ன மற்றும் துலனி சாமிகா என்ற பொறியியலாளர்களினால் இந்த செயற்கைகோள் நிர்மாணிக்கப்பட்டது. ஜப்பான் விண்வெளி நிலையத்தினால் அமெரிக்காவிலுள்ள நாசா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராவணா - 1 என்ற இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக தற்போது வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் செயற்கை கோளை வெற்றிகரமாக அனுப்பிய நாடுகளில் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது.
வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராவணா செயற்கைகோள் - Reviewed by Author on April 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.