சட்டவிரோத தேன் உற்பத்தி இடம் முற்றுகை
வடதமிழீழம்: வவுனியாவில் இன்று அதிகாலை 5 மணியளவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதில் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையிலிருந்த 116 சீனிப்பாணிப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல் ஒன்றினடிப்படையில் ஓமந்தை சுகாதாரப் பரிசோதகர், நொச்சிமோட்டை சுகாதாரப் பரிசோதகர் கூட்டாக இணைந்து வவுனியா பொது சுகாதாரப் பரிசோதகதர் தலைமையில் சமயபுரம் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத தேன் உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது சீனிப்பாணியை தேன் என்று தெரிவித்து 116 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி மலையகப்பகுதிகளில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
சட்டவிரோத தேன் உற்பத்தி இடம் முற்றுகை
Reviewed by Author
on
April 10, 2019
Rating:
No comments:
Post a Comment