சர்வதேச ரீதியில் "செப்டம்பர் 11" தாக்குதலுக்கு பின் மிகப்பெரிய திட்டமிட்ட தாக்குதல் இதுவே! -
சர்வதேச ரீதியில் தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவமே மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் உலக அளவில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய திட்டமிட்ட தாக்குதல் சம்பவமாக இலங்கையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரீதியில் "செப்டம்பர் 11" தாக்குதலுக்கு பின் மிகப்பெரிய திட்டமிட்ட தாக்குதல் இதுவே! -
Reviewed by Author
on
April 23, 2019
Rating:
No comments:
Post a Comment