அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் 06 செல் கவர்கள் மீட்பு-படங்கள்

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியில் இருந்து ஒரு தொகுதி  செல் கவர் மூடப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை 07-05-2019 காலை மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர்.

குறித்த காணியில் கொட்டப்பட்டிருந்த குப்பையுடன் சுமார் 6 செல் வெடி பொருளுக்கான கவர் மூடிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த செல் கவரினை திறந்து பார்த்துள்ளனர்.

-எனினும் அதனுல் செல் அல்லது வெடி பொருட்கள் எவையும் காணப்படவில்லை.குறித்த 6 செல் கவரினையும் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் 06 செல் கவர்கள் மீட்பு-படங்கள் Reviewed by Author on May 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.