அண்மைய செய்திகள்

recent
-

ஆயுதங்களுடன் வடக்குக்கிற்குள் புகுந்த 20 வாகனங்கள்!


வெடி பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்கிற்குள் சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 31 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதனூடாக செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அத்துடன் 20 வாகனங்களில் இலக்கங்களும் குறித்த சோதனை சாவடியில் காட்சிப்படுத்தப்பட்டு அவ் வாகனங்களை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடி வருகின்றனர்.

காலை, மாலை என இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவுக்குள் நுழையும் 4 திசைகளிலும் இந்த பாதுகாப்பு கடவைகள் நிறுத்தப்பட்டு வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று சோதனையிடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


ஆயுதங்களுடன் வடக்குக்கிற்குள் புகுந்த 20 வாகனங்கள்! Reviewed by Author on May 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.