அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அனுமதிப் பத்திரம் இல்லாமல் கடல் சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது-(படம்)

மன்னார் பொலிஸார் மற்றும்  கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமல், கடல் சங்குகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் நேற்று  23-05-2019 வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,  தாராபுரம் சந்தியில் உள்ள  வீதி தடையில் வைத்து குறித்த வாகனம் சோதனைக்கு உற்படுத்தப்பட்ட போதே உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சங்கு மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த  வாகனத்தில் இருந்த மூட்டைகளில் இருந்து  2,500 சங்குகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சங்குகளை கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பேசாலை இருந்து மன்னாருக்கு சங்குகளை கொண்டு செல்லும் போதே கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேசாலையைச் சேர்ந்தவர் எனவும்,சங்குகள் மற்றும் வாகனம்,  கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரனைகளுக்காக    மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் அனுமதிப் பத்திரம் இல்லாமல் கடல் சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது-(படம்) Reviewed by Author on May 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.