அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்ட அருட்சகோதரர்கள் 4 பேர் ஆயரினால் குருக்களாக திருநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.(படம்)

மன்னார் மறைமாவட்ட தியாக்கோன் அருட்சகோதரர்கள் 4 பேர் நேற்று  வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எப்.எல்.இம்மனுவல் பெர்னான்டோ ஆண்டகை அவர்களினால் குருத்துவ அருட்பொழிவு செய்து குருக்களாக திரு நிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று   வியாழக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த அருட்சகோதரர்கள் 4 பேரூம் மறைமாவட்ட ஆயர் மேதகு எப்.எல்.இம்மனுவல் பெர்னான்டோ ஆண்டகை அவர்களினால் குருத்துவ அருட்பொழிவு செய்து குருக்களாக திரு நிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மற்றும், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.





மன்னார் மறைமாவட்ட அருட்சகோதரர்கள் 4 பேர் ஆயரினால் குருக்களாக திருநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.(படம்) Reviewed by Author on May 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.