அண்மைய செய்திகள்

recent
-

christchurch தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது!


நியூசிலாந்து - christchurchஇல் இடம்பெற்ற தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் துணைப் பிரதமர் வின்சென்ட் பீட்டர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது.
அத்துடன், நியூசிலாந்து - christchurch இடம்பெற்ற தாக்குதலுக்கு பழி தீர்க்கவே இலங்கையில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “christchurchஇல் இடம்பெற்ற தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறியுள்ளார்.
christchurch பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பழிவாங்குவதற்காகவே இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதைக் அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் தனது நாடு துஷ்பிரயோகப் படுத்தப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
christchurch தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது! Reviewed by Author on May 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.