அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது –(படம்)

மன்னார் சௌத்பார் புகையிரத வீதி பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு மன்னார் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில்,மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் விரை மேற்கொண்ட நடவடிக்கையின் போது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் மன்னார் சௌத்பார் புகையிரத வீதி பகுதியில் வைத்து 923 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஆண்,பெண் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

-கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது –(படம்) Reviewed by Author on May 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.