அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு உப்பில்லா கஞ்சி-படங்கள்

ஈழப் போரில் இறுதியில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த தமிழ் மக்களின் 10 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் MSEDO ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரனையில் முள்ளிவாய்கால் மண்னில் இறுதி யுத்தத்தின் போது உண்ட உப்பில்லா கஞ்சியானது அவ் மக்களை நினைவுபடுத்தும் முகமாக வழங்கப்பட்டது

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் பொது மக்கள் அனைவருக்கும் கஞ்சியானது வழங்கப்பட்டதுடன் பாதிக்கபட்ட மக்கள் நினைவாக மன்னார் சாந்திபுரம் பாடசாலை மற்றும் ஈச்சளவக்கை பொது மண்டபம் பகுதியில் மரம் நாட்டியும் வைக்கப்பட்டது

இறுதி யுத்தத்தில் தனது 4 பிள்ளைகளை இழந்த தாய் ஈச்சளவக்கை பகுதியில் இறந்த 26 பேரின் நினைவாக ஆலயபகுதியில் மரங்கன்றை நட்டிவைத்தார்

இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் படசாலைகள் பொது இடங்கள் ஆலயங்கள் என தெரிவு செய்யப்பட இடங்களில் முள்ளிவாய்கால் மண்ணில் இறந்த மக்களின் நினைவாக என சுமார் 5000 மரக்கன்றுகள் நாடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.















மன்னார்-முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு உப்பில்லா கஞ்சி-படங்கள் Reviewed by Author on May 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.