அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் புனித லோறன்சியார் றோ.க.த.க.பாடசாலையில் புதியகட்டட திறப்புவிழா-

தலைமன்னர் புனிதலோறன்சியார் பாடசாலையில் 16.05.2019 அன்றுகாலை 9.30 மணியளவில் புதியகட்டடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இப் பாடசாலையில் நீண்டகாலமாகமாணவர்களின் பொதுநோக்கத்திற்கான மண்டபம் ஒன்று இல்லாமைகுறையாககாணப்பட்டது. குறிப்பாகமாணவர் மன்றம் ஒளிவிழா பொங்கல் விழா வாணி விழா போன்ற நிகழ்வுகளை நடாத்துவதற்கான பொதுநோக்குமண்டபமற்ற நிலையில் காணப்பட்டது.

இக் குறையானது இன்றையதினம் தீர்க்கப்பட்டுள்ளது.
இம் மண்டபத்தை இங்குஅமைப்பதற்குபாடசாலையின் அதிபரின் விண்ணப்பமும் மன்னார் பிரதேசசபை உறுப்பினர் சாபிர் அவர்களின் பரிந்து பேசுதலுடனும் முக்கியமான காரணிகளாகஅமைந்திருந்தது. அதற்கமையலக்ஸ்மிகெண்டர் என்னும் நன்கொடையாளரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலைமன்னார் பியர் கடற்படைஅதிகாரிகளினால் இம் மண்டபம் புனரமைக்கப்பட்டு இன்றையதினம் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.





தலைமன்னார் புனித லோறன்சியார் றோ.க.த.க.பாடசாலையில் புதியகட்டட திறப்புவிழா- Reviewed by Author on May 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.