அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையில் 22 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது-(படம்)

மன்னார் பேசாலை உதயபுரம் பகுதியில் தனது உடைமையில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை பேசாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

-கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 22 கிலோ 100 கிராம்  நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் உதவி அத்தியட்சகர் கஸ்தூரி ஆரச்சி மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜித்  தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் விரைந்து செயற்பட்ட நிலையில் பேசாலை உதயபுரம்  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்ட போது நபர் ஒருவர் தனது உடைமையில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ 100 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா பொருளை மீட்டுள்ளதோடு, குறித்த  நபரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வருகின்றது.


மன்னார் பேசாலையில் 22 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது-(படம்) Reviewed by Author on June 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.