அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மனியில் 2ம் உலகப்போரின் போது வீசப்பட்ட ராட்சதகுண்டு செயலிழப்பு!


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய ராட்சத வெடிகுண்டு, பெர்லின் நகரில் நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டது.
1939-1945ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அப்போது ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில், சுமார் 100 கிலோ எடை கொண்ட ராட்சத வெடிகுண்டை அமெரிக்கா வீசியது.

ஆனால், வெடிக்காமல் இருந்த அந்த வெடிகுண்டு அலெக்சாண்டர்பிளாட்ஸ் சதுக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், வெடிகுண்டை செயலிழக்க வைப்பதற்கான நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் குறித்த ராட்சத வெடிகுண்டை செயலிழக்க வைத்தனர்.
பெர்லினில் அதிகாலை 1.45 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், எந்த பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக செயலிழப்பு நடவடிக்கை முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் 2ம் உலகப்போரின் போது வீசப்பட்ட ராட்சதகுண்டு செயலிழப்பு! Reviewed by Author on June 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.