அண்மைய செய்திகள்

recent
-

3 மகள்களோடு தற்கொலை செய்கிறேன்: பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்


குடிப்பதற்கு நல்ல குடிநீர் இல்லாத நிலையில், வெறுப்படைந்த விவசாயி, தனது 3 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஹசாயன் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரபால் என்பவரே குடிநீருக்காக தமது 3 மகள்களுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரியவர்.
ஹசாயன் பகுதியில் இருக்கும் ஆழ்குழாய் நீர் மிகவும் உவர்ப்பாக இருப்பதாக கூறி பல முறை இவர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே சந்திரபால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.

அதில், குடிநீர் பிரச்னைகள் குறித்தும், தமது இயலாமை குறித்தும் சந்திரபால் விளக்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதே நிலை நீடித்தால் தமது மகள்களுடன் தற்கொலை செய்துகொள்வதை தவுர வேறு வழி தெரியவில்லை எனவும், அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டிவதைப்பதுடன் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.
மக்கள் அன்றாட தேவைக்கான தண்ணீரை பெறவும் நாளுக்கு நாள் அல்லல் பட்டு வருகின்றனர். பல தனியார் நிறுவனங்கள் தண்ணீர் பிரச்னை காரணமாக தொழிலாளர்களை சொந்த வீட்டில் இருந்தே பணியாற்ற பணித்துள்ளது.

3 மகள்களோடு தற்கொலை செய்கிறேன்: பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம் Reviewed by Author on June 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.