அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபை தனி ஒரு மதம் சார்ந்து செயற்படுமானால் வெளிமாவட்டத்து சைவ மக்களின் ஆதரவை பெற்று எங்களாலும் உண்ணாவிரதங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியும் சைவ மக்கள்

மன்னார் பிரதேச சபை தனி ஒரு மதம் சார்ந்து செயற்படுமானால் வெளிமாவட்டத்து சைவ மக்களின் ஆதரவை பெற்று எங்களாலும் உண்ணாவிரதங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியும்  சைவ மக்கள் ஒருமனதாக தெரிவித்துள்ளார்கள் 


கத்தோலிக்க மக்களால் உடைக்கப்பட்ட திருக்கேதீஸ்வரத்தின் அலங்கார வளைவை மீண்டும் அவ்விடத்தில் அமைப்பதற்கு திருக்கேதீஸ்வரம் நிர்வாகம் மன்னார் பிரதேச சபைக்கு விண்ணப்பித்திருந்தது  மூன்று மாதகால இழுபறி நிலையின் பின் கடந்த 14ம் திகதி மாந்தை சந்தியில் அலங்கார வளைவு அமைப்பதற்கு மன்னார் பிரதேச சபை அனுமதி வழங்கியிருந்தது

கடிதம் அனுப்பி ஒருவாரம் நிறைவு பெறாத நிலையில் கத்தோலிக்க மக்களின் எதிர்ப்புகள் அழுத்தங்களால் அந்த அனுமதியினை தற்காலிகமாக இரத்து செய்வதாக மன்னார் பிரதேச  சபையின் தவிசாளர் முஜாஹிர் அவர்கள நேற்யை தினம் (22) ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்

கத்தோலிக்க மக்களால் உடைக்கப்பட்ட திருக்கேதீஸ்வரத்தின் அலங்கார வளைவை மீண்டும் அவ்விடத்தில் அமைப்பதற்கு திருக்கேதீஸ்வரம் நிர்வாகம் மன்னார் பிரதேச சபைக்கு விண்ணப்பித்திருந்தது  மூன்று மாதகால இழுபறி நிலையின் பின் கடந்த 14ம் திகதி மாந்தை சந்தியில் அலங்கார வளைவு அமைப்பதற்கு மன்னார் பிரதேச சபை அனுமதி வழங்கியிருந்தது

கடிதம் அனுப்பி ஒருவாரம் நிறைவு பெறாத நிலையில் கத்தோலிக்க மக்களின் எதிர்ப்புகள் அழுத்தங்களால் அந்த அனுமதியினை தற்காலிகமாக இரத்து செய்வதாக மன்னார் பிரதெச சபையின் தவிசாளர் முஜாஹிர் அவர்கள நேற்யை தினம் (22) ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார் இது சம்பந்தமாக திருக்கேதீஸ்வரம் திருப்பணிச்சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய(23) கலந்துரையாடலில் மன்னார் பிரதேச சபைக்கும் திருக்கேதீஸ்வரம் நிர்வாகத்தினருக்குமான பகிரப்பட்ட கடிதங்கள் இணைச்செயலாளர் எஸ்.இராம கிருஷ்ணன் அவர்களால் பொதுமக்களுக்கு வாசித்து காட்டப்பட்டது 
அதில் மாந்தைப்பகுதியில் இயங்கும் கிராம அபிவிருத்தி சங்கம் மன்னார் பிரதேச  சபைக்கு அனுப்பிய கடிதத்தில் திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவு அமைக்கும் அனுமதியை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் அல்லது மன்னார் மாவட்ட கத்தோலிக்க மக்களை இணைத்து ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படும் என்று மன்னார் பிரதேச சபையை அச்சுறுத்தி எழுதப்பட்டிருந்ததை செயலாளர் திருப்பணிச்சபை இணைச்செயலாளரைல் வாசித்து காட்ப்பட்டு பொது மக்களின் கருத்து கேட்டபொது 
மன்னாரில் இந்துக்கள் சிறுபான்மை என்பதால் அனைத்து விடயங்களிலும் குறித்த ஒரு மதம் ஆதிக்கம் செலுத்துகிறது   எனவே மன்னார் பிரதேச சபை நீதியாக செயற்பட வேண்டும் அரசியல் லாபங்களுக்காக பெரும்பான்மை மதத்தலைவருக்கு  சார்பாக செயற்பட்டால் திருக்கேதீஸ்வரத்தில் நிரந்தரமான அலங்கார வளைவு அமைப்பதற்கு வெளிமாவட்டங்களில் பெரும்பாண்மையாக இந்துக்கள் வாழும் யாழ்ப்பாணம் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமலை என அனைத்து மாவட்ட மக்களின் ஆதரவைப் பெற்று மன்னார் பிரதேச சபைக்கு எதிராக இந்துக்களாலும் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியும் என்று தெரிவித்தனர்

இந்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வரம்  தி|ருப்பணிச்சபையின் இணைச்செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் திருக்கேதீஸ்வரம் நம்பிக்கை பொறுப்பாளர் சபை பிரதி தலைவர் திரு பிருந்தாவனநாதன் திருக்கேதீஸ்வரம் திருப்பணிச்சபை பொரளாளர் திரு.தயானந்த ராஜா திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் சட்டத்தரணிகளாக மா.வினோதன் செல்வராஜா டினேசன் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமநாதன் பாலச்சந்திரன் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் வைத்தியர் கதிர்காமநாதன்  , மா.நடேசானந்தன் மற்றும் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் நிர்வாக உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்







213
மன்னார் பிரதேச சபை தனி ஒரு மதம் சார்ந்து செயற்படுமானால் வெளிமாவட்டத்து சைவ மக்களின் ஆதரவை பெற்று எங்களாலும் உண்ணாவிரதங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியும் சைவ மக்கள் Reviewed by Admin on June 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.