தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்! அதில் சிக்கிய நபரின் நாடகம் அம்பலம் -
பொள்ளாச்சியில் 7 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவிகளை சீரழித்து வீடியோ எடுத்த கும்பலின் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் இந்த கும்பலுடன் தொடர்பு இருப்பதாக பார் நாகராஜ் என்பவரையும் பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கைதான நாகராஜ் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூற உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒருசில பொலிசாரும் நாகராஜூக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்! அதில் சிக்கிய நபரின் நாடகம் அம்பலம் -
Reviewed by Author
on
June 15, 2019
Rating:
No comments:
Post a Comment