அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபடும் தமிழ் இளைஞர்கள்! பொலிஸாரை மிரள வைத்த சிறுவர்கள் -


கனடா, ரொரன்டோ பகுதியில் துப்பாக்கி மற்றும் மடிக்கணினியை திருடிய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல ஒன்லைன் இணையத்தளத்தில் 23 வயதான யுவதி ஒருவர் தனது மடிக்கணினியை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தார். இதனை கொள்வனவு செய்வதற்கு ஆண் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய அடுத்த நாள் அதனை கொள்வனவு செய்வதற்காக இருவர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணிடம் இருந்த மடிக்கணினை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். இதன்போது இருவரில் ஒருவரின் இடுப்பில் இருந்த துப்பாக்கி ஒன்று கீழே விழுந்துள்ளது.

அண்மையில் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றில் குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
அடுத்த நாள் நபர், திருடிய மடிக்கணியை இணையம் ஊடாக விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விற்பனை செய்ய தயாராகிய நபருடன் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடம் மடிக்கணினி ஒன்றும், பெரிய கத்தி, துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குழுவாக செயற்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய அந்த குழுவில் இயங்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். குழுவாக செயற்படும் இந்த குழுவில் சிறுவர்கள் உள்ளமை குறித்து ரொரன்டோ பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவினரால் திருடப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இந்நிலையில் டொரொன்டோவை சேர்ந்த 18 வயதான தாஜீன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஸன் லக்ஷ்மிகாந்தன் ஆகிய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் ஜுலை மாதம் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தால் தம்மை அழைப்புக்கொண்டு தகவல் வழங்குமாறு டொரொன்டோ பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரொன்டோவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபடும் தமிழ் இளைஞர்கள்! பொலிஸாரை மிரள வைத்த சிறுவர்கள் - Reviewed by Author on June 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.