அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-மடு ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் நடமாடும் நீதிமன்றம்...

மன்னார் மடு ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு நான்கு நாளைக்கு மடு ஆலய வளாத்தில் MOBILE COURT-நடமாடும் நீதி மன்றம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 23 ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு ஆலயத்தின் பெருவிழா எதிர்வரும் 2 ந் திகதி காலை திருப்பலியுடன் நிறைவு பெற இருக்கின்றது.

இவ் விழாவை முன்னிட்டு இங்கு நடைபெறும் விழாக் காலங்களில் இவ்விடத்தில் சட்ட விரோத செயல்பாட்டில் ஈடுபடுவோரை கைது செய்யும் பட்டசத்தில் இவர்களின் நலன் கருதி மடு ஆலய வளாத்தில் நான்கு நாளைக்கு நடமாடும் நீதிமன்றம் இடம்பெறுகின்றது.

29 ந்திகதி (29.06.2019) தொடக்கம் 2 ந் திகதி (02.07.2019) வரை நடைபெற
இருக்கும் இவ் நடமாடும் நீதிமன்றம் 29 ந் திகதி தொடக்கம் 01 ந் திகதி
வரை மாலையிலும் 2 ந் திகதி காலையிலும் நடைபெறும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் நடமாடும் நீதிமன்றத்தின் நீதிபதியாக மன்னார் மாவட்ட நீதவான்
நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜ கடமை புரிவார் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன்னார்-மடு ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் நடமாடும் நீதிமன்றம்... Reviewed by Author on June 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.