அண்மைய செய்திகள்

recent
-

முசலி-வில்பத்து பகுதியில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு-இராணுவத்தின் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா பங்கேற்பு-படங்கள்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வில்பத்து பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் வில்பத்து பகுதிகளில் தொடர்ச்சியாக மரக்கண்றுகள் நாட்டப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் வில்பத்து பகுதி சார்ந்த பகுதிகளில் மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மரக்கண்றுகள் நாட்டம் நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் பண்டார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் இராணுவத்தின் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா கலந்து கொண்டார்.

இதன் போது முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மக்கள் பாடசாலை மாணவர்கள்,இராணுவத்தினர் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு மரக்கண்றுகளை நாட்டி வைத்தனர்.

இன்றைய தினம் 3 அயிரம் மரக்கண்றுகள் நாட்டப்பட்டுள்ளதோடு,இது வரை குறித்த பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கண்றுகள் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









முசலி-வில்பத்து பகுதியில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு-இராணுவத்தின் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா பங்கேற்பு-படங்கள் Reviewed by Author on June 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.