அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கில் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு மின் இணைப்பு மாணி பொருத்தும் வேலைத்திட்டத்திற்கு காசோலை வழங்கி வைப்பு------

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் மற்றும்  தேவன் பிட்டி ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு மின் இணைப்பு மாணி பொருத்தும் வேலைத்திட்டத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை 02.07.2019 காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள்   அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த மின் இணைப்பு மாணிகள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின் இணைப்பிற்கான காசோலை வழங்கும் நிகழ்வு குறித்த கிராமங்களில் இடம் பெற்றது.

இதன் போது  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் , மன்னார் பிரதேச சபை முதல்வர் எம்.முஜாஹிர் , மீள் குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜூபுர் ரஹ்மான் , மாந்தை மேற்கு பிரதேச சபை முதல்வர் சந்தியோகு ,இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன்  ஆகியோர் கலந்து கொண்டு குறித்த காசோலைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மாந்தை மேற்கில் தெரிவு செய்யப்பட்ட 59 குடும்பங்களுக்கு மின் இணைப்பு மாணி பொருத்தும் வேலைத்திட்டத்திற்கு காசோலை வழங்கி வைப்பு------ Reviewed by Author on July 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.