அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட செயலகத்தில்'ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்'


மன்னார் மாவட்ட செயலகத்தில்  புதன் கிழமை (17.07.2019)வடக்கு மாகாண கல்வி பண்பாடலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டுத் திணைக்களம் அத்துடன் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து மேற்கொண்ட ஒழுங்கமைப்பின்  கீழ்  'ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' என்ற தொணிப்பொருளில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்
மன்னார் செயலகத்தில் மன்னார் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்
இ.நித்தியானந்தனின் நெறிப்படுத்தலின்  நடைபெற்றது.

இவ் நிகழ்வை வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் மற்றும் மும்மத உத்தியோகத்தர்கள் குத்து
விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.  இவ்  நிகழ்வுகளில்
வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் இவருடன் இணைந்து மன்னார் மாவட்ட செயலளாரும் அரசாங்க அதிபருமான சீ.ஏ.மோகன்ராஸ், வட மாகாண அமைச்சுக்களின் மகளீர் விவகார அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர், சுகாதார துறை அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர்,
கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுனரின் செயலக செயலாளர்,
மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பொது மக்கள் பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.






மன்னார் மாவட்ட செயலகத்தில்'ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' Reviewed by Author on July 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.