அண்மைய செய்திகள்

recent
-

புலி உறுப்பினர் பற்றிய விபரங்களை வழங்க மறுத்த ஜெர்மனி -

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் பற்றிய விபரங்களை வழங்க முடியாது என ஜெர்மனிய அரசாங்கம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய விபரங்களை வழங்குவதற்கு ஜெர்மனியின் புலனாய்வு பிரிவு மறுத்துள்ளது.

ஜெர்மனியின் ஸ்டுகார்ட் நகரில் குறித்த சந்தேகநபரே புலிகளின் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட ஸ்னைப்பர் போராளி பற்றிய விபரங்களை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமரை புலிகளே படுகொலை செய்தனர் என அந்த அமைப்பின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினி இராணுவத்தினரிடம் கூறியிருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெர்மனி சட்டங்களின் பிரகாரம் இந்த ஸ்னைப்பர் தாக்குதல் தாரி தொடர்பில் தகவல்களை வழங்க முடியாது என அந்நாட்டு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் முன்னணி சட்டத்தரணி ஒருவர் இந்த புலி உறுப்பினர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலி உறுப்பினர் பற்றிய விபரங்களை வழங்க மறுத்த ஜெர்மனி - Reviewed by Author on July 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.