காது வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்?
காது வலிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அந்தவகையில் தற்போது அந்த காரணங்கள் என்னென்ன என்பதையும் அதற்காக தீர்வு என்ன என்பதையும் பார்ப்போம்.
காது வலி ஏற்பட காரணங்கள்
- தொண்டையில் அழற்சி காரணமாகவும் காது வலி ஏற்படலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வலி ஏற்படலாம்.
- சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.
- நீர்நிலைகளில் குதித்துக் குளிப்பதாலும், கடல் நீரில் குளிப்பதாலும் நோய்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தக்கூடும்.
- சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும் போதும் காதுவலி வரும். அதிகமாக சிரத்தை எடுத்து மூக்கு சிந்தினாலும் காதில் வலி ஏற்படும்.
- பற்சொத்தை, கடைவாய்ப்பல் வெளிவராதிருத்தல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி , கழுத்தெலும்புத் தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களைப் பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.
செய்ய கூடாதவை
- காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது.
- 80 முதல் 85 டெசிபல் வரைதான் நம் காது சப்தத்தைத் தாங்கும். அதற்கு மேல் என்றால் சவ்வு கிழிந்துவிடும். அதனால் அதிக சப்தத்தைத் தவிர்க்கவும்.
- காதில் இயர் போன் வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில் வீடியோ கேம்ஸ், படம் பார்ப்பது செல்போன் பேசினால் காது வலிக்கு அதிக காரணமாகும்.
- நீண்ட நேரம் செல்போன் பேசினால் காது வலிக்கும். அதனால் காது மாற்றி மாற்றிப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.
தீர்வு
- காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வலி குறையும்.
- தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.
- தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.
- மருதாணியின் வேரை நசுக்கி அதில் வரும் சாற்றினை காதில் விட்டால், காது வலி தீரும்.
- கொஞ்சம் நல்லெண்ணையில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து, பின் அந்த எண்ணெய்யை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி குறையும்.
- துளசி இலையை வெந்நீரில் அரைத்து காதில் சில சொட்டுகள் விட, ஏற்பட்ட தொற்று நோய் தீரும்.
- காதில் அவ்வப்போது 2-3 சொட்டு வெதுவெதுப்பான கடுகு எண்ணெய் சில துளிகள் விட்டு 10-25 நிமிடம் அசையாமல் இருக்கவும். இது காதில் உள்ள அழுக்கை எளிதாக சுத்தம் செய்யும்.
- காதில் ஆப்பிள் சைடர் வினிகர் முக்கிய பஞ்சைக் கொண்டு அடைத்தால் பாக்டீர்யா மற்றும் வைரஸ்கள் வளருவதை அடியோடு அழிக்கலாம்.
காது வலியிலிருந்து எப்படி தப்பிக்கலாம்?
Reviewed by Author
on
July 29, 2019
Rating:
No comments:
Post a Comment