அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் அமைச்சராகும் ரிஷாட் பதியூதீன்! -


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பதவி விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ள இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு தயார் என சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று அல்லது நாளை அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பதவியை ஏற்க தயாராக இருப்பதாகவும், அதற்கான நேரத்தை ஜனாதிபதியே அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியூதின் உட்பட விலகிய அனைவரும் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமைச்சராகும் ரிஷாட் பதியூதீன்! - Reviewed by Author on July 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.