அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்-நீண்ட நாள் போராட்டத்தின் பின்னர் மீன் பிடி அனுமதி பெற்ற தமிழ் மீனவர்கள்....


மன்னார் ஈச்சளவாக்கை சன்னார் பகுதிகளில் நன்னீர் மீன்பிடியில் பல வருடங்கள் ஈடுபட்ட தமிழ் மீனவர்கள் நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரனமாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக முகாம்கலில் தங்கவைக்கப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்ட சுமூகமான சூழலின் பின்னர் மீண்டும் தம் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்

மீள் குடியேறி 10 வருடங்கள் கடந்த நிலையில் குறித்த ஈச்சளவாக்கை சன்னார் பகுதி நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்களை இதுவரை பெரிய மடு மீனவர் சங்கத்தை சேர்ந்த சகோதர இன மீனவர்கள் பெரியமடு குளத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட் அனுமதிக்கவில்லை

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் MSEDO ஊடாக  வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறப்பாட்டிற்கு அமைவாக விசரணைகளை மேற்கொண்டு கடந்த ஜனவரி மாதம் வவுனியா நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக குறித்த பாதிக்கப்பட்ட நண்ணீர் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டது

நீரியல்வள திணைக்களத்தின் ஊடக அனுமதி வழங்கப்பட்ட போதும்

மீண்டும் குறித்த தமிழ் மீனவர்கள் பெரிய மடு குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சகோதர இன மீனவர்களால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடும் போரட்டத்தின் மத்தியில் ஆறு மாதங்களின் பின்னர் இரண்டு மீனவர்களுக்கான அனுமதி வழங்கபப்பட்டு குறித்த மீனவர்கள் நேற்றில் இருந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

இருப்பினும் நீரியல் வள தினைக்களைத்தின் அனுமதி வழங்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் மீனவருக்கு தொடர்சியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்க்து.

மன்னாரில்-நீண்ட நாள் போராட்டத்தின் பின்னர் மீன் பிடி அனுமதி பெற்ற தமிழ் மீனவர்கள்.... Reviewed by Author on July 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.