மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் பொது வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்-படம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாசிற்கும் இடையில் வெள்ளிக்கிழமை (19) காலை 9.30 மணியளவில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் குறித்த விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி செந்தூர்பதிராஜா,பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, மன்னார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டிபன் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும்,குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குறிப்பாக வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள்,வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை உற்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதோடு,வைத்தியசாலையில் குறைபாடுகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்று அபிவிருத்திக் குழு நிர்வாகத்துடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.அந்த நிலையிலே பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் அரசாங்க அதிபருடன் குறித்த சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் குறித்த விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி செந்தூர்பதிராஜா,பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, மன்னார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டிபன் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும்,குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குறிப்பாக வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள்,வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை உற்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதோடு,வைத்தியசாலையில் குறைபாடுகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்று அபிவிருத்திக் குழு நிர்வாகத்துடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.அந்த நிலையிலே பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் அரசாங்க அதிபருடன் குறித்த சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் பொது வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்-படம்
Reviewed by Author
on
July 21, 2019
Rating:
No comments:
Post a Comment