அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தொடக்கம் பொத்துவில் பகுதி கடற்பிராந்தியங்களை பயன்படுத்துவதை தவிர்குமாறு கோரிக்கை


நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வானிலை அசாதாரண சூழ்னிலை காரணமாக  மன்னார் தொடக்கம் புத்தளம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.30 முதல்  20 ஆம் திகதி மாலை 5.30 வரை இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதீத காற்று காரணமாகவும் கடலலையின் தாக்கம் காணப்படுவதாலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மன்னார் தாழ்வுபாடு பேசாலை வங்காலை. சிலாவத்துறை தேவன்பிட்டி பகுதி மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

மன்னார் தொடக்கம் பொத்துவில் பகுதி கடற்பிராந்தியங்களை பயன்படுத்துவதை தவிர்குமாறு கோரிக்கை Reviewed by Author on July 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.