அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் உயர்தர பரீட்சை ஆரம்பம்-படங்கள்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் உயர்தர மாணவர்களுக்கான பரிட்சைகள் ஆரம்பம் ஆகி நடைபெறுகின்றது அந்த வகையில் மன்னார் மாவட்டதிலும் உயர்தர பரீட்சைகள் ஆனது அமைதியான முறையில் இடம் பெற்று வருகின்றது.

அனைத்து பரீட்சை நிலையங்களிலும் இரணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் மன நிலையை குழப்பாத வகையில் உரிய பரிசோதனைகளின் பின்னரே பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புப்படுகின்றனர்.

தனியார் பரீட்சாதிகள் பாடசாலை பரிட்சாத்திகள் என அனைவரும் அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுசீட்டு சாரதி அனுமதிபத்திரங்கள் அனுமதி அட்டை என அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவதுடன் பரிட்சைகள் எழுதுவதற்காகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்சியான பாதுகாப்பு கடமைகளின் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பரீட்சைகள் தொடர்பாகவோ பாதுகாப்பு தொடர்பாகவோ முறைப்பாடுகள் இருப்பின் அதுதொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காண அவசர தொலைபேசி இலக்கங்களும் பரீட்சை நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.









மன்னார் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் உயர்தர பரீட்சை ஆரம்பம்-படங்கள் Reviewed by Author on August 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.