அண்மைய செய்திகள்

recent
-

உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 32வது நினைவு வணக்க நிகழ்வு -


உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 32வது நினைவு வணக்க நிகழ்வு மட்டக்களப்பு மண்டூர், கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயகப் போராளிகள் கட்சியியும், இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பொதுமக்கள், கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ப.கோணேஸ்பரன் (சாந்தன்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், ஆகியோர் இணைந்து திலீபனின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்துள்ளனர்.

பின்னர் கலந்து கொண்ட பிரதிநிதிகளால் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு, மலரஞ்சலி இடம்பெற்றதோடு, நினைவுரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 32வது நினைவு வணக்க நிகழ்வு - Reviewed by Author on September 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.