சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவருக்கு நேர்ந்த கதி -
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் அக்டோபர் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து விசைப்படகு ஒன்றுடன் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் ஐவர் நேற்று மாலை காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவருக்கு நேர்ந்த கதி -
Reviewed by Author
on
September 19, 2019
Rating:
No comments:
Post a Comment