அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிய சந்தர்ப்பம் தவறவிடாதீர்கள்…..



மன்னார் மாவட்டத்தில் வாழுகின்ற அத்தனை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் மன்னார் மாவட்ட தேனீ மாற்றுத்திறனாளிகள் சுய உதவி அமைப்பின் ஊடாக  மாவட்ட செயலகத்தில் வருகின்ற மாதம் நடைபெற இருக்கின்ற  மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச்சான்றிதழ் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச்சான்றிதழ் பெறுவதற்கான தகமைகளாக.........
  • மாற்றுத்திறனாளியின் சொந்த வாகனமாக இருக்கவேண்டும்.
  • வாகனமானது மாற்றுத்திறனாளியினால் செலுத்துவதற்கு ஏற்றால் போல் வடிவமைப்பபை பெற்றிருக்கவேண்டும்.
  • வாகனப்புத்தகம் உரிமையாளரிடம் இருக்கவேண்டும்.
  • மருத்துவப்பரிசோதனையானது சாதாரண சாரதிகளுக்கான பரிசோதனையாகவே(பிறசர்-சுகர் கண்-காது) அமையும் இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச்சான்றிதழ் வழங்குவதில் இருக்கின்ற சிக்கல் நிலை இருக்காது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 05பிரதேச செயலகங்களில் இருக்கின்ற ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும்  இத்தகவலை வழங்கி அவர்களும் தமது பயணங்களையும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்திக்கொள்ள ஒவ்வொருவரையும் இவ்விடையத்தினை தெரியப்படுத்தி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தகவலுக்காக தொடர்புகளுக்கு
F.பெனில்- 0779689972



 
மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிய சந்தர்ப்பம் தவறவிடாதீர்கள்….. Reviewed by Author on September 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.