அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கன் பொலிஸ் நிலையம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு-படங்கள்

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் பொலிஸ் நிலையம் நேற்று  15/10/2019 செவ்வாய்க்கிழமை மாலை   வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் அவர்களால் வைபவரீதியாக திறந்து  வைக்கப்பட்டது.

தற்காலிகமாக இயங்கி வந்த முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கான நிறந்தர கட்டிடமானது 5 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு  இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கலந்து கொண்டாதுடன்  சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன , வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுர அபய விக்ரம, மற்றும் மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, உற்பட மன்னார் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பொலிஸ் நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.










மன்னார் முருங்கன் பொலிஸ் நிலையம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு-படங்கள் Reviewed by Author on October 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.