அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில். 'இன்றைய உலகில் கிறிஸ்தவ வாழ்வின் சாட்சியமும் தலைமைத்துவமும்' பயிற்சி பட்டறை

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் இவ் மாதத்தை (ஐப்பசி)
விஷேட மறைபரப்பு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

அத்தோடு இன்று ஞாயிறு (13.10.2019) இலங்கை திருச்சபை பொதுநிலையினரின் தினமாக கொண்டாட அழைப்பும் விடுத்துள்ளது.

எனவே மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினரின் ஆணைக்குழு மற்றும் குடும்பநல பணியகத்தின் இயக்குனர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாரின் தலைமையில் இவ் மறைமாவட்ட பொதுநிலையினரின் உருவாக்கத்தை ஆழப்படுத்தும் நோக்குடன் கருத்தமர்வுகளையும், பயிற்சி பட்டறைகளையும் நடாத்தி வருகின்றது.

12 ஆம் திகதி (12.10.2019) தொடக்கம் 20 ஆம் திகதி வரை இவ் கருத்தமர்வுகள்
மன்னார் மாவட்ட குடும்பநல பொதுநிலையினர் ஆணைக்குழு மண்டபத்தில்
நடைபெறுகின்றன.

12 ஆம் திகதி மறைமாவட்ட இளையோருக்காகவும்,
13 ஆம் திகதி பொதுநிலை தலைவர்கள், வின்சன் டீ போல் சபையினர் மற்றும் கொல்பின் சங்கத்தினருக்கும்,
14 ஆம் திகதி குருத்துவ வாழ்வில் 20 ஆண்டுகளுக்கு உட்பட்ட குருக்களுக்கும்,
15 ஆம் திகதி மறைமாவட்ட அனைத்து குருக்களுக்கும்,
16 ஆம் திகதி பங்குகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் குருக்களுக்கும்,
17 ஆம் திகதி வவுனியா மாவட்டத்திலுள்ள மறைமாவட்ட குடும்பங்கள் பொதுநிலையினர், தலைவர்கள் மற்றும் ஆலய சபையினருக்கும், 18 ஆம் திகதி பங்கு மேய்ப்புப் பணிசபை மற்றும் ஆலய சபையினருக்கும் 19 ஆம் திகதி அரச, அரச சார்பற்ற ஊழியர்களுக்கும் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கும் இவ் கருத்தமர்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு வளவாளர்களாக தென் இந்தியாவைச் சார்ந்த அருட்பணியாளர்கள் குழந்தை சாமி அடிகளார் (கப்புசிகன் சபை), செல்வராஐh அடிகளார் (இயேசு சபை), றோய் லாசர் அடிகளார் (வேலூர் மாவட்டம்) ஆகியோர் செயல்படுகின்றனர்.


மன்னாரில். 'இன்றைய உலகில் கிறிஸ்தவ வாழ்வின் சாட்சியமும் தலைமைத்துவமும்' பயிற்சி பட்டறை Reviewed by Author on October 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.