அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு ஆரம்பித்து வைப்பு-படம்

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் பல வருடங்களின் பின் 02/10/2019 புதன் கிழமை  காலை இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

-சுமார் 10 கிராமங்களை உள்ளடக்கி வைத்திய சேவையை மேற்கொண்டு வரும் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக இரத்த பரிசோதனை பிரிவு இல்லாத நிலை காணப்பட்டது.

-இப்பகுதியில் இருந்து மக்கள் இரத்த பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று வந்தனர்.

-இந்த நிலையில் மக்களின் நலநனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாக பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இ.ஈட்டன் பீரிஸ் அவர்களினால் வைபவ ரீதியாக இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு  ஆரம்பித்து வைக்கப்பட்டது.







மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு ஆரம்பித்து வைப்பு-படம் Reviewed by Author on October 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.