அண்மைய செய்திகள்

recent
-

சீனாவைத் துண்டாட நினைத்தால் உடல்கள் சுக்குநூறாக்கப்படும்.. எலும்புகள் மண்ணாகும்! ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரிக்கை -


சீனாவை துண்டாட நினைப்பவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இந்த போராட்டங்கள் அந்நாட்டை உலுக்கியதைத் தொடர்ந்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும் மற்றும் கூடுதலான ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்கின்றன.
ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக, இதுவரை சுமார் 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவை துண்டாட நினைப்பவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜி ஜின்பிங் கூறியதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘சீனாவைத் துண்டாட நினைக்கும் எந்த அந்நிய சக்தியும், சீன மக்களுக்கு எதிரானது தான். சீனாவில் இருந்து எந்த பகுதியை யார் துண்டாட நினைத்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் உடல்கள் சுக்குநூறாக்கப்படும். எலும்புகள் மண்ணோடு மண்ணாக போகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி ஜின்பிங் எந்த ஒரு பிராந்தியத்தையும் குறிப்பிட்டு இதனை கூறவில்லை. எனினும், ஹாங்காங்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



சீனாவைத் துண்டாட நினைத்தால் உடல்கள் சுக்குநூறாக்கப்படும்.. எலும்புகள் மண்ணாகும்! ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரிக்கை - Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.