அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீளிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் செயலமர்வு-படங்கள்

மன்னார் மீளிணக்கத்தை உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல் மற்றும் செயலமர்வு நிகழ்வானது கிராம அபிவிருத்தி நிருவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தின் பொது மண்டபத்தில் இடம் பெற்றது.

மாவட்ட ரீதியில் மீளிணக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை பெற்றுக்கொள்வதன் அடிப்படையிலும் இளைஞர்கள் மத்தியில் மீளிணக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதற்கான அவசியம் தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்கும் முகமாக குறித்த செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வி மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய மும் மதத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த செயலமர்வின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆலோசனைகளின் அடிப்படையில் கிராம ரீதியில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் நடைமுறைபடுத்தபடவுள்ளமை குறிப்பிடதக்கது.










மன்னார் மீளிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் செயலமர்வு-படங்கள் Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.