அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடும் மழை காரணமாக அனேகமான கிராமங்கள் நீரில் மூழ்கின-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக அனேகமான கிராமங்கள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் நீரி மூழ்கியுள்ளன

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்காளாக பெய்துவரும் கன மழைகாரணமாக குளங்கள் கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் நிறைந்ததன் காரணமாக மேலதிக நீர் அனைத்தும் மக்கள் வசிக்கும் தாழ் நிலப்பகுதிகளுக்குள் வருவதன் காரணமாக அனேகமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன குறிப்பாக மன்னார் பிரதேச சபைக்குட்டப்பட்ட சாந்திபுரம் ஜீவபுரம் ஜிம்றோன் நகர் எமில் நகர் உட்பட பல்வேறு கிராமங்கள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதுடன் பாதைகள் முழுவதும் நீரினால் மூடப்பட்டுள்ளது.

தொடர்சியாக மழை பெய்துவருவதனால் வயல் நிலங்கள் மற்றும் தோட்டச்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலங்களுக்குள்ளும் நீர் நிறைந்து அனைத்து பயிர்களும் அழுகும் நிலையில் காணப்படுகின்றது

அதே நேரத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சில கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம் பெயரவேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது.






மன்னாரில் கடும் மழை காரணமாக அனேகமான கிராமங்கள் நீரில் மூழ்கின-படங்கள் Reviewed by Author on October 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.