உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங்குனர் திடீர் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்-படங்கள்
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உற்பட்ட உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங்குனர் திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டமையினை கண்டித்து அப்பிரதேச மக்கள் இன்று திங்கட்கிழமை (7) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வைத்திய தேவைகளுக்காக சென்று வருகின்றனர். குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு இன்று வரை நிறந்தர வைத்தியர் இல்லை.
இந்த நிலையில் குறித்த சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த மருந்து வழங்குனர் திடீர் என இடமாற்றம் பெற்றுள்ளார்.
பதில் கடமைக்கு ஒரு மருந்து வழங்குனர் நியமிக்கப்படாத நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டமையினை கண்டித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-உடனடியாக உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிறந்தரமான வைத்தியர் ஒருவரையும், மருந்தாளர் ஒருவரையும் நியமிக்க கோரி குறித்த அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மக்கள் முருங்கன் வைத்தியசாலைக்கு 07 கிலோ மீற்றர் தூரமும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 14 கிலோ மீற்றர் தூரமும் பயணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடக்கில் உள்ள சில திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற தென்பகுதியைச் சேர்ந்த சில உத்தியோகஸ்தர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வைத்திய தேவைகளுக்காக சென்று வருகின்றனர். குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு இன்று வரை நிறந்தர வைத்தியர் இல்லை.
இந்த நிலையில் குறித்த சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த மருந்து வழங்குனர் திடீர் என இடமாற்றம் பெற்றுள்ளார்.
பதில் கடமைக்கு ஒரு மருந்து வழங்குனர் நியமிக்கப்படாத நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டமையினை கண்டித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-உடனடியாக உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிறந்தரமான வைத்தியர் ஒருவரையும், மருந்தாளர் ஒருவரையும் நியமிக்க கோரி குறித்த அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மக்கள் முருங்கன் வைத்தியசாலைக்கு 07 கிலோ மீற்றர் தூரமும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 14 கிலோ மீற்றர் தூரமும் பயணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடக்கில் உள்ள சில திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற தென்பகுதியைச் சேர்ந்த சில உத்தியோகஸ்தர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங்குனர் திடீர் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்-படங்கள்
Reviewed by Author
on
October 07, 2019
Rating:
No comments:
Post a Comment