அண்மைய செய்திகள்

recent
-

2015 நாங்க ஆட்சியை விட்டு சென்ற பின் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை நாமல் ராஜபக்ஸ மன்னாரில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கான ஆதரவு பிரச்சார நிகழ்வுகளில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த முறை நீங்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்த எந்த கட்சிகளும் உங்கள் அபிவிருத்தியையோ ஆசைகளையோ அபிலாசைகளையோ நிறைவேற்றவில்லை

ஒரு பக்கம் ரிஸாட்பதிவுதின் கக்கீம் மற்று பக்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பு இவர்களில் யாரும் உங்கள் நன்மை தீமை சுக துக்கங்கள் பற்றி சிந்திக்கவில்லை அவர்கள் அவர்களுடைய ஆசையையும் தேவையையும் பற்றியே கதைத்தார்கள் எனியும் நீங்கள் அவ்வாறான கட்சிகளுக்ககு பின்னால் செல்ல வேண்டிய அவசியம் இல்லை

எங்களுடைய பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு பின்னர் ரிசாட்டிடோ கக்கீமோ தமிழ்தேசிய கூட்டமைபோ எதுவும் இல்லை இப்போது எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் பின்னால் இருப்பது அனேக கிராமங்களை சேர்ந்த பொது மக்களே

எங்களுக்கு தேவை உங்கள் கிராமங்களை அடிப்படை அபிவிருத்தியை கொண்டு வருவதே ஒவ்வொறு பிரதேச செயலகத்தில் மூன்று நல்ல வளங்கள் உடைய பாடசாலையையாவது உறுவாக்க வேண்டும் என எமது ஜனாதிபதி வேட்பாளரும் தெரிவித்துள்ளார் அத்துடன் உங்கள் பிள்ளைகள் நகர பாடசாலைகளில் மத்திரம் சென்று படிக்க வேண்டிய நிலை இனி இருக்கது கொழும்பு கண்டி போன்ற பகுதிகளில் இருக்கிம் அபிவிருத்தியை உங்கள் பகுதிக்கும் கொண்டு வருவோம்

எனவே உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதிலும் அபிவிருத்தியை வழங்குவதிலும் மகிந்த ராஜபக்ஸவும் கோத்தபாயராஜபக்ஸவும் உறுதியுடம் இருப்பதால் அவர்களுக்கான ஒத்துழைப்பையும் வாய்பையும் வழங்குங்கள் நாங்கள் சொன்னால் நிச்சயம் செய்வோம் எனவே உங்கள் மூலம் நாங்கள் வெற்றியை கொண்டு செல்வேம் என்று நினைக்கின்றோம் எனவே உங்கள் வாக்குகளை மொட்டு சின்னத்துக்கு வழங்குமாறு கேட்டு கொள்ளுகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

2015 நாங்க ஆட்சியை விட்டு சென்ற பின் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை நாமல் ராஜபக்ஸ மன்னாரில் தெரிவிப்பு Reviewed by Author on November 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.