அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தின் இராணுவத்தினர் அடாவடி.....

வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூபி மற்றும் நினைவு கற்கல் அனைத்தும் இரானுவத்தினரால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது

குறித்த விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் நாளைய தினம் தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் தினத்திற்கு என மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிரமதானத்துக்கு உட்படுத்தப்பட்டு பொது சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் பண்டிவிருச்சான் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கற்கள் நேற்று இரவு இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளதாகவும்

நேற்று இரவு நேரத்தில் மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் அதிகளவிலான இராணுவ வீரர்கள் காணப்பட்டதாகவும் அதே நேரத்தில் இரானுவ வாகனங்களும் காணப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்

கடந்த வாரம் குறித்த துயிலும் இல்ல சிரமதான பணிகளின் போது பொலிஸ் மற்றும் இரானுவத்தினர் புலனாய்வாளர்கள் பலர் வருகை தந்து பொது மக்களை புகைபடம் எடுத்து அச்சுறுத்தும் விதமாகவு செயற்பட்டுள்ளனர்

புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவகையில் மாவீரர் நாளை நினைவு கூறுமாறு தெரிவித்த நிலையிலும் நாளைய தினம் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

மன்னார் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தின் இராணுவத்தினர் அடாவடி..... Reviewed by Author on November 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.