அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர் பகுதியில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற சிரமதானம்-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய 'மனிதர் நேசிக்கும் சுகாதாரமிக்க சுற்றாடலை உருவாக்குவோம்' எனும் கருப் பொருளில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில்   சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வு இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் நகர பகுதியில் இடம் பெற்றது.

-மன்னார் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த சிரமதான நிகழ்வில் மன்னார் நகர சபை,பொது சுகாதார பரிசோதகர்கள்,மன்னார் வர்த்தக சங்கம், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமூதாய பொலிஸ் குழு பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

-இதன் போது மன்னார் நகர சுற்று வட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு,வடிகான்களும் சுத்தம் செய்யப்பட்டதோடு,நகர சபை சுற்றிகரிப்பு பணியாளர்களின் உதவிகளுடன் கழிப் பொருட்கள் அகற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நகர் பகுதியில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற சிரமதானம்- Reviewed by Author on November 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.