அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை கல்லறை பூங்காவில் பழமைவாய்ந்த மூவியரசர் சிற்றாலயம் ஆயரால் திறப்பு

மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் கிராமங்களில்
ஒன்றான  பேசாலையில் அங்குள்ள சேமக்காலையில் மிகவும் பழமைவாயந்த மூவியரசர் சிற்றாலயம்  என அழைக்கப்படும் இவ் ஆலயம் யுத்தக்காலத்தில் அழிவுக்குள்ளாகி இருந்தது.

 தற்பொழுது இது பேசாலை மைந்தனும் ஆப்கானிஸ்தான் யுனிசெப்
திட்டப்பணிப்பாளரும் பொறியியலாருமான ஏ.றோய் சுரேஸ் மிராண்டாவின் நிதியில் ஆலயம் புரணமைப்பு செய்யப்பட்டு கடந்த ஆத்துமாக்கள் தினத்தன்று ஆயரால் திறந்து வைக்கப்பட்டபோதும்

இவ் ஆலயத்தில் 35 வருடங்களுக்பின் திருப்பலி ஒப்புக்கொடுக்குமுகமாக
நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை (12.11.2019) மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையால் திருப்பலிப்பீடம் அர்ஷிசித்து அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு ஆயரின் தலைமையில் பேசாலை பங்குதந்தையும்
திருச்சபையின் சட்டவல்லுனருமான அருட்பணி எஸ்.கே.தேவராஐh, உதவி பங்கு தந்தை அருட்பணி றஞ்சன் சேவியர், தமிழ்நாடு அருட்பணி சாள்ஸ் அடிகளார்கள் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும்

கலந்துகொண்ட பக்தர்களின் ஒரு பகுதினரையும் படங்களில் காணலாம்.





பேசாலை கல்லறை பூங்காவில் பழமைவாய்ந்த மூவியரசர் சிற்றாலயம் ஆயரால் திறப்பு Reviewed by Author on November 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.