அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட முச்சக்கர வண்டிகள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையானது மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் 22/12/2019 காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது

நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தலின் படி பாவனையில் உள்ள முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதுடன் புதிய பதிவு இலக்கம் வழங்கப்பட்டு அடிப்படை பதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுவருகின்றது

குறித்து செயற்திட்டத்தின் முதல் கட்டமாக மன்னார் நகர் பகுதிகளில் தொழில் ரீதியாக பாவனையில் உள்ள சுமார் 100க்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது அத்துடன் தொடர்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட இருப்பதுடன் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களும் திரட்டப்படவுள்ளமை  குறிப்பிடதக்கது.








மன்னார் மாவட்ட முச்சக்கர வண்டிகள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை-படங்கள் Reviewed by Author on December 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.