அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் டெங்கு காய்ச்சலினால் மரணம்-


மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் டெங்கு நோயினால் பாதீக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

-மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி ஹெத்தாகட ஹெட்ட வீரகொல்லாவ பிரதேசத்தைச் சேந்த மூன்று
பிள்ளைகளுக்கு தந்தையான பி.சீ.பியரத்தின (வய- 45) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

இதே வேளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடு முறையில் சென்ற அனுராதபுரம் தளாவ பகுதியை சேர்ந்த எஸ்.ரத்னாயக்க (வயது-28) என்ற பொலிஸ் அதிகாரி நேற்று திங்கட்கிழமை (13) அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

 இவர்களும் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா? என பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



மன்னாரில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் டெங்கு காய்ச்சலினால் மரணம்- Reviewed by Author on January 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.